அட்டனில் இருந்து கண்டி பகுதிக்கு பயணித்த தனியார் பேருந்து மற்றும் நாவலபிட்டியில் இருந்து கினிகத்தேன பகுதிக்கு சென்ற தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி பெண் ஒருவர் பலத்த காயங்கலுக்கு உள்ளாகி நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நாவலபிடடி பொலிஸார் தெரிவித்தனர்இந்த விபத்து 31.07.2018.செவ்வாய்கிழமை காலை 06.45 மணி அளவில் கினிகத்தேன பிரதான வீதியின் இரண்டாம் கட்டைபகுதியில் உலங்கஸ்ஹின்ன பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
நாவலபிட்டியில் இருந்து கினகத்தேன பகுதிக்கு சென்ற தனியார் பேருந்து அதிகவேகத்தின் சென்றமையினாலே குறித்த பகுதியில் லொறி வண்டியை முந்தி கொண்டு சென்ற போதே இந்த அனர்த்தம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நாவலபிட்டியில் இருந்து கினிகத்தேன பகுதியை நோக்கி பயணித்த பேருந்தின் சாரதி நாவலபிட்டி பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த விபத்தின் இரண்டு பேருந்துகளுக்கும் பலத்த சேதங்கள் எற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்



