ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளது தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று(28) மாலை இடம்பெறவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் இந்தச் சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
யுகதனவி மின்னுற்பத்தி மையம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



