கைதிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு : எடுக்கப்பட்ட தீர்மானம்

0
170

நாட்டில் கைதிகளின் எண்ணிக்கையில் பாரியளவு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி டி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையில் மொத்தமாக அனைத்து சிறைச்சாலைகளிலும் சுமார் 30,800 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகளை தடுத்து வைக்கக்கூடிய சிறைச்சாலைகளுடன் ஒப்பீடு செய்யும் போது கைதிகளின் எண்ணிக்கை 300 வீதமாக அதிகரித்துள்ளதாகவும், இதனால் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை, ஹொரண சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக நிர்மாணிக்கப்படும் சிறைச்சாலையில் பத்தாயிரம் கைதிகள் வரை தடுத்து வைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here