கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 15 மணித்தியால நீர் வெட்டு

0
144

அத்தியாவசிய முன்னேற்றப் பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை(07) 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை(07) மாலை 5 மணி முதல் நாளை மறுதினம் (08) காலை 8 மணி வரை வலையமைப்பு விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த காலப்பகுதியில் கொழும்பு 11, 12, 13 மற்றும் கொழும்பு 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மக்களுக்கு தேவையான நீரை சேமித்து வைக்குமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மக்களுக்கு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here