மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவி தீவுக்குச் செல்லும் பாலத்தின் கீழ் உள்ள கடல் பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, நேற்று (11) இரவு சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இறந்த பெண்ணின் வயது 40 முதல் 45 வயதுக்குட்பட்டதாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும் அவர் கருப்பு மற்றும் மஞ்சள் நிற உடை மற்றும் அணிந்திருந்ததாகவும் அவரது உயரம் சுமார் 05 அடி எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.