சீனாவில் “லாங்யா” புதிய வைரஸ் பரவும் அபாயம்

0
260

சீனாவில் லாங்யா என்ற புதிய வைரஸ் பரவிவருவதாகவும் இது வரை இந்த வைரசிற்கு 35 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸ் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஹெனிபவைரஸ் அல்லது லாங்யா என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் நிபா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ்யின் பாதிப்பு அதிகமாக இருந்தால் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் கொல்லக் கூடிய திறன் உடையது என்று தெரிவிக்கப்படுகின்றது.

லாங்யா வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுவது. இது ஒருவரிடமிருந்து மற்றொவருக்கு தொற்றுகிறதா என்று சரியாகத் தெரியாத நிலையில் இதற்கான ஆராய்ச்சிகளைச் செய்து வருகின்றனர்.

தொண்டையிலிருந்து எடுக்கும் எச்சில் மாதிரி மூலம் இந்த தொற்றைக் கண்டறியலாம். இதற்கு என்று தனியாக மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை 71 ஷ்ரூஸ் என்று அழைக்கப்படும் சிறிய எலி போன்ற பாலூட்டி, நாய் மற்றும் ஆடுகளுக்கு லாங்யா வைரஸ் தொன்று கண்டறியப்பட்டுள்ளது.

லாங்யா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் காய்ச்சல் உள்ள நிலையில் இரும்பல், உடல் இளைப்பு, உடல் சோர்வு, குமட்டல், தசைப் பிடிப்பு போன்ற அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு சிறிய விகிதத்தில் நிமோனியா மற்றும் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டில் அசாதாரணங்கள் உட்பட மிகவும் தீவிரமான சிக்கல்கள் இருந்தன. எவ்வாறாயினும், இந்த அசாதாரணங்களின் தீவிரம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் ஏதேனும் தொற்று ஆபத்தானதா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

இந்த வைரஸ் பாதிப்பு தற்போது சீனாவின் ஹெனான் மற்றும் ஷான்டாங் மாகாணங்களில் கண்டறியப்பட்டுள்ளது என்று சீனா ஊடகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here