தலவாக்கலை – சென்.கூம்ஸ் தோட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதார நலன் கருதி ஒருதொகை முகக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமாரினால் 5000 முகக்கவசங்கள் தோட்ட முகாமையாளரிடம்
கையளிக்கப்பட்டன.
மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சென் கூம்ஸ் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தோட்ட முகாமையாளர் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமாரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இது குறித்து உரிய தரப்புடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர்களான சிவானந்தன், சுதாகரன் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்