ஜனாதிபதியின் பயண விவரங்கள் நிராகரித்தது செயலகம்!

0
127
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உள்நாட்டு பயணம் குறித்த தகவல்களை வெளியிட ஜனாதிபதி செயலகம் மறுத்துவிட்டது. தகவல் அறியும் உரிமை (RTI) கோரிக்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் பதிலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜினாத் பிரேமரத்னவால் ஆகஸ்ட் 4 ஆம் திகதி கேட்கப்பட்ட கேள்விகள்,    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 5(1)(b)(i) இன் கீழ் ஆகஸ்ட் 27 ஆம் திகதி முறையாக நிராகரிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு நேரடியாக தொடர்புடையதாகக் கருதப்படும் தகவல்களை வெளியிடுவதற்கு விலக்கு அளிக்கிறது.

அதன் பதிலில், சட்டத்தின் பிரிவு 31(1) இன் கீழ் 14 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்று செயலகம் விண்ணப்பதாரருக்குத் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here