சற்று முன் அமைச்சர் நாமல் ராஜபக்ச அவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள தமிழ் கைதிகளை சந்தித்தார்.
கைதிகள் தங்கள் பிரச்சனைகள் குறித்து அமைச்சரை உடனடியாக சந்திக்க வேண்டும் என நேற்றைய தினம் கடிதம் எழுதியிருந்தமை குறிப்பிடதக்கது.
கைதிகளை சந்தித்த நாமல் ராஜபக்ச அவர்கள் அவர்களுடைய கவலைகளை கேட்டறிந்ததுடன் அவை தொடர்பாக தீர்வொன்றை பெற்றுத்தரும் நடவடிக்கைகளை தனிபட்ட ரீதியில் தானே முன்னெடுப்பதாகவும் அமைச்சர் அவர்களுக்கு உறுதியளித்தார்.