தலவாக்கலையில் லொறி விபத்து…

0
176

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை தேயிலை தொழிற்சாலை பகுதியில் லொறி ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ்விபத்து 23.11.2018 அன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டனிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற குறித்த லொறி தலவாக்கலை பகுதியில் மண்மேடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர் பலத்த காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

DSC00636 DSC00641 DSC00643

மழை காரணமாக வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here