துப்பாக்கி காட்டி மிரட்டிய நபர் கைது 

0
8

தலவத்துகொட சந்தியில் வைத்து , துவிச்சக்கர வண்டி செலுத்துனருக்கு துப்பாக்கியை காட்டி மிரட்டியதற்காக மகிழுந்து உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது காரை முந்திச் செல்ல விடாமல் தடுத்த காரணத்திற்காக அவர் இவ்வாறு துவிச்சக்கர வண்டி செலுத்துனருக்கு மிரட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்த 9MM உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நுகேகொட, மஹாசென் மாவத்தையிலிருந்து தலவதுகொட நோக்கி பயணித்த துவிச்சக்கர வண்டியின் பின்னால், ​​சந்தேக நபர் பிராடோ ஜீப்பில் பயணித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மகிழுந்து உரிமையாளர் பல சந்தர்ப்பங்களில் துவிச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயன்ற போதும் அதற்கான வாய்ப்பு இல்லாத நிலையில் அவர் கோபமடைந்து தலவதுகொட சந்திக்கு அருகில் வாகனத்தை நிறுத்தி தன்னிடம் இருந்த துப்பாக்கியைக் காட்டி துவிச்சக்கர வண்டியை செலுத்தியவரை மிரட்டியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் துவிச்சக்கர வண்டியை செலுத்திய நபர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய , மகிழுந்து செலுத்திய நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here