பதுளை-பண்டாரவளை வீதி, தெமோதர 10ஆம் மைல்கல் பகுதியில், காரொன்று சுமார் 140 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், மூவர் படுகாயமடைந்துள்ளனர் என்று, பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவமானது நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.