தொழிலாளர்களின் வாழ்வினை ஒளிமயமாக்க அனைத்து சமூனத்தினரும் ஒன்றிணைய வேண்டும்.

0
166

பெருந்தோட்ட மக்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்காக சுமார் 200 வருடங்களாக உழைத்து வருபவர்கள் ஆனால் அவர்களின் வாழ்க்கை பாரிய நெருக்கடியான நிலையிலேயே உள்ளன.

இந்த நாட்டிக்காக உழைக்கின்ற தோட்ட மக்களை பற்றி பாரிய அளவில் சிந்திக்க வேண்டிய தேவை அனைத்து சமூகத்திற்கும் உள்ளது. அவர்களின் பொருளாதார நிலை காரணமாக இன்று அவர்கள் பசி பட்டினில் மாத்திரமின்றி சுகாதாரம், கல்வி,காணி விட்டுரிமை உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

கிடைகின்ற அரச மற்றும் ஏனைய உதவிகள் அவர்களுக்கு முறையாக சென்றடைவதில்லை. இந்த நாட்டில் ஒரு சமூகமாக வாழ்ந்தாலும் அவர்கள் மாற்றாந்தாயின் பிள்ளை போலவே நடத்தப்படுகின்றன. அவர்களுக்கு நியாயமான விதத்தில் உரிமைகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கமும்,தொழிற்சங்கங்களும் மலைகள் மக்கள் பிரதிநிதிகளும் முறையாக முன்வரவில்லை. என செட்டிக்நிறுவனத்தின் பணிப்பாளரும் அருட் தந்தையுமான டெஸ்மன் பெரேரா தெரிவித்தார்.

நேற்று (15) ஹட்டன் சிட்டிக் நிறுவனத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்……

கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக செட்டிக்நிறுவனம் தோட்டத்தொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் அவர்களின் வாழ்வினை ஒளிமயமாக்குவதற்கு பணி புரிந்து வருகிறது 2024 ஆண்டு வரும் போது அவர்கள் இந்த நாட்டிக்கு வருகை தந்து சுமார் 200 ஆண்டுகளை கடக்கின்றன. இதனை நினைவு கூறும்முகமாகவும்,அவர்களின் வாழ்க்கைக்கு விடிவினை ஏற்படுத்த அரசாங்கத்தினதும்,அரச சார்பற்ற நிறுவனங்களினதும் ஏனைய சகங்களினதும் உதவியினை பெற்று அவர்களுக்கு அடிப்படை வசதிகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொடுப்பதற்காக அனைத்து சமூகங்களுகம் ஒன்றிணைவது காலத்தின் தேவையும் கடமையும் ஆகும் இன்று பெருந்தோட்ட மக்களை பற்றியும் அவர்களின் வாழ்க்கை பற்றியும் அவர்கள் படும் இன்னல் பற்றியும் நாங்கள் மாத்திரமே பேசி வருகின்றோம்.

இது தொடர்பாக சிங்கள மக்களும் தெளிவு பெற வேண்டும். இன்றுள்ள தொழிற்சங்கங்களும் மக்கள் பிரதிநிகளும் அவர்களுக்கென்று எதனையும் முழுமையாக செய்யவில்லை. என்று தான் கூற வேண்டும் காரணம் அவர்களுக்கு வாழ்வதற்கு தேவையான அளவு கூட இது வரை சம்பளத்தினை பெற்றுக்கொடுக்கவில்லை.அது மாத்திரமின்றி அவர்களின் காணியுரிமை வீட்டுரிமை அரச வளங்கள் பகிர்வு போன்றவற்றில் ஏனைய மக்ககளுக்கு கிடைப்பது போல் இவர்களுக்கு கிடைப்பதில்லை.அதே நேரம் தோட்டங்களில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளுகம் கிடையாது அவர்களுக்கு அவசரத்திற்கு மலம் கழிப்பதற்கு கூட வசதியில்லை, ஓய்வு இது மிக பெரிய அநீதியான விடயம் ஆகவே நாங்கள் எதிர்காலத்தில் அனைத்து சமய தலைவர்களையும் அனைத்து இன மக்களையும் இணைத்துக்கொண்டு இவர்கள் படும் துன்பங்களுக்கு தீர்வு முற்படுவோம் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு காலி பிரதேசத்தின் பங்கு தந்தை மைக்கல் ராஜேந்திரன் புனித திருச்சிலுவை ஆலயத்தின் பங்கு தந்தை நிவ்மன் பீரிஸ் மௌலவி எம்.ஏ.எம் நாசிம், இணைப்பாளர் எஸ்.நிக்கலஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here