நடிகர் சத்தியராஜ் மீது வழக்குப் பதிவு!

0
9

தமிழக நடிகர் சத்யராஜ் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் பாரத் ஹிந்து முன்னணி அமைப்பு இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளது.

சென்னையில் கடந்த மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சியில், நடிகர் சத்யராஜ் பங்கேற்று உரை நிகழ்த்தியிருந்தார்.

அதன்போது, இந்துக் கடவுள்கள் கற்பனை, மிகைப்படுத்தப்பட்ட மாயை என அவர் குறிப்பிட்டமைக்கு எதிராக இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மீது, தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரையும் அதன் தலைவரையும் அவர் புகழ்ந்து பேசியதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here