திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்துங்கம பிரகதி மாவத்தை பகுதியிலுள்ள கால்வாயில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (17) மாலை திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
தனிப்பட்ட தகராறு காரணமாக உயிரிழந்தவர் அவரது நண்பரினால் போத்தலொன்றில் தாக்கப்பட்டு நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் 24 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் திஸ்ஸமஹாராம பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.




