நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர தீர்மானம் எடுத்துள்ளது. நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர தீர்மானம் எடுத்துள்ளது.
மேலும், இன்று பிற்பகல் 12.00 மணி தொடக்கம் 2.00 மணி வரை அமைதியான முறையில் குறித்த ஆர்ப்பாட்டங்களை நடாத்த சங்கம் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில்,
▪️காலி மாவட்டம் – கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு முன்னால்
▪️மாத்தறை மாவட்டம் – மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னால்
▪️ஹம்பாந்தோட்டை மாவட்டம் – தங்காலை பேருந்து நிலையத்திற்கு முன்னால்
▪️ நுவரெலியா மாவட்டம் – நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னால்
▪️பதுளை மாவட்டம் – பதுளை மாகாண பொது வைத்தியசாலைக்கு முன்னால்
▪️அம்பாறை மாவட்டம் – அம்பாறை வைத்தியசாலைக்கு முன்னால்
▪️அம்பாறை மாவட்டம் – தெஹி அட்டகண்டிய ஆதார வைத்தியசாலைக்கு முன்னால்
▪️கல்முனை பிரதேசம் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக
▪️திருகோணமலை மாவட்டம் – கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு முன்னால்
▪️புத்தளம் மாவட்டம் – ஹலவத்தை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னால்
▪️கேகாலை மாவட்டம் – கேகாலை பொது வைத்தியசாலைக்கு முன்னால்
▪️இரத்னபுர மாவட்டம் – இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு முன்னால்
▪️அநுராதபுரம் மாவட்டம் – அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால்
▪️மன்னாரம் மாவட்டம் – மன்னார் மாவட்ட மருத்துவமனை முன்னால்
▪️முலத்தீவு மாவட்டம் – முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனை முன்னால்
▪️வவுனியா மாவட்டம் – வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னால்
▪️கிளிநொச்சி மாவட்டம் – கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு முன்னால் ஆகிய இடங்களுக்கு முன்னால் மேற்படி ஆர்ப்பாட்டங்களை நடாத்த மருத்துவ அதிகாரிகள் சங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் இன்று பிற்பகல் முதல் மேற்குறித்த வைத்தியசாலை செயற்பாடுகள் பாதிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.