ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் வொல்கர் டர்க் நாளை (23) இலங்கைக்கு வருகை தர உள்ளார்.
மனித உரிமைகள் ஆணையாளர் டர்க் ஜூன் 26 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் ஜனாதிபதி, பிரதமர் வெளியுறவு அமைச்சர், பல அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், மதத் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், இராஜதந்திர சமூக உறுப்பினர்கள் மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் ஆகியோரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மனித உரிமைகள் ஆணையாளர் கண்டிக்குச் சென்று அங்கு புனித தந்ததாதுவை வணங்கவுள்ளதுடன் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் பிரதான பீடாதிபதிகளையும் சந்திக்கவுள்ளார்.
அதுமாத்திரமின்றி, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கும் பயணம் மேற்கொள்வார் எனவும் அவர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களைச் சந்திக்கவுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.