நீரேந்தும் பகுதிகளில் நிரம்பி இருக்கும் குப்பைகளை சேகரிக்கும் வேலைத்திட்டம்

0
183

காசல்ரீ நீர்தேக்கத்தில் குப்பைகள் அதிகரிக்கப்பட்டு சூழல் மாசடைவு ஏற்பட்டதனாலும் களனி கங்கைக்கு செல்லும் இந்த நீரில் மாசு தன்மை ஏற்பட்டுள்ளதாலும், இந்த காசல்ரீ நீர்தேகத்தில் கரையோர பகுதிகள் மற்றும் நீரேந்தும் பகுதிகளில் நிரம்பி இருக்கும் குப்பைகளை சேகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்று 10.12.2021 அன்று முன்னெடுக்கப்பட்டது.

இவ் வேலைத்திட்டத்தினை அட்டன், வட்டவளை மற்றும் நோர்வூட் பொலிஸார் மற்றும் சிவில் அமைப்பினர், கடற்படையினர், ஆகியோர் ஒன்றினைந்து மேற்கொண்டனர்.

 

இதன்போது நீர்தேகத்தின் கரையோர பகுதியில் துர்நாற்றத்தை வீசக்கூடிய நிலையில் காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணி விறுவிறுப்பாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

க.கிஷாந்தன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here