நீர்கொழும்பு-கொழும்பு பிரதான வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு பொலிஸாரின் அறிவிப்பு

0
90

நாளை (14ஆம் திகதி) இரவு 7 மணி முதல் நீர்கொழும்பு-கொழும்பு பிரதான வீதியில் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என சாரதிகளுக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வத்தளை பொலிஸ் பிரிவில் உள்ள ஹந்தல புராண ரஜமஹா விகாரையின் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி பெரஹரா நாளை (14) இரவு 7 மணி முதல் நாளை (15) காலை வரை நடைபெற உள்ளதால், அந்த நேரத்தில் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஹந்தல புராண ரஜமஹா விகாரையிலிருந்து ஆரம்பமாகி ஹந்தல வீதியூடாக ஹந்தல சந்தி வரை பயணித்து கொழும்பு-நீர்கொழும்பு வீதியைக் கடந்து பழைய நீர்கொழும்பு வீதி ஊடாக கொழும்பு-நீர்கொழும்பு பிரதான வீதிக்கு திரும்பி அல்விஸ் டவுன் ஹந்தல சந்தி வரை ஊர்வலம் செல்லவுள்ளது.

சாரதிகளின் வசதிக்காக பொலிஸாரால் நியமிக்கப்பட்ட மாற்று வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here