நுவரெலியாவில் இருந்து நானுஓயா நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று நானுஓயா சுரங்கப்பாதைக்கு அருகில் வைத்து திங்கட்கிழமை (23) அன்று விபத்துக்குள்ளானதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியின் முன்னால் பயணித்த லொறியை கவனக்குறைவாக முந்திச் செல்ல முயன்ற போது, முச்சக்கர வண்டி சறுக்கிச் சென்று வீதியோரத்தில் உள்ள கொன்கிரீட் மேட்டில் மோதியுள்ளது.
விபத்தின் போது பாடசாலை மாணவர்கள் மூவர் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதுடன் அவர்களுக்கோ சாரதிக்கோ விபத்தின் போது காயம் ஏற்படவில்லை என்றாலும், முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா பகுதியில் நிலவும் மோசமான வானிலை மற்றும் கடும் பனி காரணமாக, வாகன ஓட்டுநர்கள் கவனமாக வாகனங்களை செலுத்துமாறு நானுஓயா பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.