பதுளை, ஹிங்குருகமுவ ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலய “ஸ்ரீ வேலவன் அறநெறி பாடசாலை” உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
பதுளை, பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ரவிக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பதுளை மாவட்ட சமூக சேவையாளர் பகி பாலச்சந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
மேலும், பதுளை ரிதீபான பேச்சியம்மன் ஆலயத்தின் பிரதம குருக்கள் மற்றும் மாவட்ட இந்து கலாசார உத்தியோஸ்தர் எஸ். நவநீதன் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டிருந்ததோடு பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது