பல் துலக்காமல் முத்தம் கொடுத்ததால் வந்த வினை : மனைவியை சரமாரியாக குத்தி கொன்ற கணவன்

0
200

பல் தேய்க்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுத்த கணவனுடன் சண்டையிட்ட மனைவியை, கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அவினாஷ். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த தீபிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

இருவருக்கும் ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.

பெங்களூரில் வேலை பார்த்து வந்த அவினாஷ் இரண்டு மாதங்களுக்கு முன் ஊர் திரும்பிய நிலையில், வீட்டிலிருந்த பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், அவினாஷ் காலையில் எழுந்ததும் பல் துலக்காமலேயே தன் குழந்தைக்கு முத்தம் கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இதனால், குழந்தைக்கு நோய் தொற்று பரவக்கூடும் என எண்ணிய தீபிகா பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுக்க கூடாது என அவினாஷை கண்டித்துள்ளார்.

ஆனாலும், மனைவியின் பேச்சைக் கேட்காத அவினாஷ் குழந்தைக்கு முத்தம் கொடுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவினாஷ் கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார்.

தீபிகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்த போது, தீபிகா ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

எனினும், பரிசோதனை செய்த மருத்துவர்கள் தீபிகா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

அவினாஷை பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here