சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள பிரெஞ்சு விண்வெளி வீரர் Thomas Pesquet மற்றும் அவருடன் தங்கியுள்ள மேலும் மூன்று விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்ப உள்ளனர்.
இவ்வருடத்தின் ஏப்ரல் 24 ஆம் திகதியில் இருந்து விண்வெளி மையத்தில் (la Station spatiale internationale) தங்கியுள்ள Thomas Pesquet, நேற்று ஞாயிற்றுக்கிழமை பூமிக்கு திரும்புவதாக இருந்தது. ஆனால் மோசமான காலநிலை காரணமாக இந்த பயணம் பிற்போடப்பட்டுள்ளது.
அதை அடுத்து, இன்று திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு அங்கிருந்து புறப்படும் அவர்கள், செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு பூமியை வந்தடைவார்கள் என அறிய முடிகிறது.



