பிரிந்து சென்ற இலங்கையைச் சேர்ந்த தனது மனைவியை Cardiff-ல் உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில் கத்தியால் குத்தி கொலை செய்த 37 வயதுடைய இலங்கை ஆண் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நிரோதா என அழைக்கப்படும் Niwunhellage Dona Nirodha Kalapni Niwunhella (32 வயது), Riverside பகுதியில் உள்ள South Morgan Place, Cardiff-ல் 2025 ஆகஸ்ட் 21 அன்று கொல்லப்பட்டார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Pentwyn-ஐச் சேர்ந்த அவரது பிரிந்து சென்ற கணவர் திசர வெககலகே, பல மாதங்களாக அவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார்.
திசர வெககலகே ஆரம்பத்தில் கொலையை மறுத்த போதிலும், பின்னர் ஜனவரி மாதம் Newport Crown Court-ல் நடைபெற்ற விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
Cardiff Crown Court-ல் அவருக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி Daniel Williams, Weragalage-ன் “கொடூரமான சுயநலம்” நிரோதாவின் வின் வாழ்க்கையை அழித்து விட்டதாக கூறினார்.
நிரோதா தனது சக ஊழியர் ஒருவருடன் பழகத் தொடங்கியதையடுத்து, தம்பதியினருக்கு இடையிலான உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இந்தத் தாக்குதல் வாகன நிறுத்துமிடத்தில் நடந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
திசரவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவர் விடுதலையாவதற்கான தகுதியைப் பெறுவதற்கு முன்னதாக குறைந்தபட்சம் 23 ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.





