புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதையடுத்து அட்டனில் ஆராவாரம்…

0
236

புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதையடுத்து, 28.10.2018 அன்று அட்டனில் இதனை மகிழ்விக்கும் முகமாக ஆராவாரம் செய்யப்பட்டது.இந்த நிகழ்வின் போது, அட்டன் நகருக்கு வருகை தந்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு நகரவாசிகள் பாரிய வரவேற்பினை அளித்து பொண்ணாடை போர்த்தி வரவேற்பளித்தனர்.

இதன்போது நகரில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு அணைவரும் மகிழ்ச்சியடைந்ததோடு, புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவின் உருவ படங்களை ஏந்தி கோஷமிட்டு கொண்டாடினார்கள்.

இதன்போது அட்டன் நகரத்தில் பொலிஸாரின் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

DSC09978 DSC09975 DSC00012

இதேவேளை, அருணலு மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் இணை தலைவருமான டாக்டர். கிர்ஷான் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி 28.10.2018 அன்று அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் நிலவரம் தொடர்ந்தும் சுபீட்சமாக இடம்பெற வேண்டும் எனவும், மஹிந்த மற்றும் மைத்திரியின் இந்த புதிய அரசாங்கம் பல அபிவிருத்திகளை கண்டு புதிய பயணத்தை நோக்கி முன்னெடுத்து செல்ல வேண்டும் எனவும் வழிபாடுகளில் ஈடுப்பட்டமை குறிப்பிடதக்கது.

 

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here