பேலியகொடை, புகையிரத வீதி குருகுல வித்தியாலயத்திற்கு அருகாமையில் நேற்றிரவு (14) ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே குறித்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடாத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் யார் என இதுவரை இனங்காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.