குற்றங்கள் உட்பட பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு இலங்கை பொலிஸ் தலைமையகம் துரிததொலைபேசி எண்கள் (Hot line ) மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை அறிவித்துள்ளது.
இதன்படி போக்குவரத்து, அதிவேக நெடுஞ்சாலைகள், சுற்றுச்சூழல், சைபர் குற்றங்கள், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, குழந்தைகள் மற்றும் பெண்கள் பணிமனை, சுற்றுலா ஆகிய பிரிவுகளை உள்ளடக்கி இந்த துரித தொலைபேசி எண்கள் பொலிஸ்மா அதிபரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் முறைப்பாடுகளைப் பதிவு செய்வதற்கு பின்வரும் துரித தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளின் ஊடாகத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.