மகனின் பிரமாண்ட திருமணத்திற்கு இலங்கையைத் தேர்ந்தெடுத்த முன்னணி இந்திய தொழிலதிபர்

0
39

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான மோகன் சுரேஷ், தனது மகன் ஜஹ்ரான் சுரேஷின் திருமணத்திற்கு இலங்கையை இடமாகத் தேர்ந்தெடுத்துள்ளார் .

இது நாட்டின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளுக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆடம்பரமான திருமண விழா இன்று பெந்தோட்ட பகுதியில் அமைந்துள்ள ஆடம்பர விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் சுமார் 300 இந்திய விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும், இதன் மூலம் 350 மில்லியன் ரூபா வருவாயை ஈட்ட முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தனித்துவமான மற்றும் மறக்கமுடியாத அனுபவங்களை விரும்பும் வெளிநாட்டினருக்கு, இலங்கை ஒரு முதன்மையான திருமண இடமாக தன்னை மேம்படுத்திக் கொள்ள இந்தத் திருமணம் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here