மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகிய 18 வயது பாடசாலை மாணவன் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

0
238

தலவாக்கலை ஜெயந்தி மாவத்தைப் பகுதியில், மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி, 18 வயது பாடசாலை மாணவரொருவர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேற்படி மாணவன், குறித்த பகுதியிலுள்ள தனியார் வகுப்புக்கு, இன்று (11) சென்றுள்ளாரென்றும் இதன்போது, வகுப்பு நடைபெறும் இடத்தின் மேற்பகுதியிலிருந்த மின்சாரக் கம்பியை, சக மாணவர்களுடன் இணைந்து விளையாட்டுக்காகப் பிடிக்க முயன்றபோதே, மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளாரென்றும் தெரியவருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here