முன்னாள் தொழிற்சங்க தலைவர் வீட்டில் சட்டவிரோத ஆயுதங்கள் கண்டுபிடிப்பு

0
8

மினுவாங்கொடயில் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை வைத்திருந்த காரணத்துக்காக சந்திம ஜெயரத்ன எனும் 45 வயது நபர் இன்று (15) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்பேரில் சந்தேக நபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் T-56 ரக துப்பாக்கி, ஒரு கைத் துப்பாக்கி, T-56 தோட்டாக்கள், கைத் துப்பாக்கி தோட்டாக்கள், மூன்று வாள்கள் மற்றும் இரண்டு கத்திகளையும் மீட்டுள்ளனர்.

சந்தேக நபர் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் இலங்கை சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்றும் தற்போது பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here