யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் 500 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் விசேட புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து, நேற்றிரவு (07) சுன்னாகம் பகுதியில் விற்பனை செய்வதற்காக எடுத்து வரப்பட்டதாகக் கூறப்படும் 500 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 25 வயது இளைஞர் ஆவார்.
சந்தேக நபருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கல் தாக்கல் செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.