யாழ்ப்பாண விமான நிலையம் படிப்படியாக அபிவிருத்தி செய்யப்படும் – அரசாங்கம் உறுதி

0
10

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் படிப்படியாக ஒரு வணிகத் திட்டத்துடன் அபிவிருத்தி செய்யப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (20) நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்கு முன்னர் விமான நிலைய ஓடுபாதையை  பெரிதாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி காரணமாக பாரிய விரிவாக்கத்தை மேற்கொள்ள முடியாது.

சுமார் 130 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய விமானங்களை தரையிறக்க வசதியாக ஓடுபாதையை விரிவுபடுத்த எதிர்பார்க்கிறோம்.

மத்தள விமான நிலையம் போன்று அல்லாது யாழ்ப்பாண விமான நிலையத்தை ஒரு வெற்றிக் கதையாக மாற்ற உறுதிப்பூண்டுள்ளோம்.

எதிர்காலத்தில் யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு விமான நிறுவனங்களை ஈர்ப்பது மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டணத்தை மேலும் குறைப்பது குறித்தும் அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here