தீபாவளி நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை மலைபோல உயர்ந்து நிற்கின்றது.தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவது தொடர்பில் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டிருப்பதால் தீபாவளியை கருத்திற் கொண்டு விலைகளை குறைக்குமாறு அரசாங்கத்திற்கு மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் தோட்டத்தொழிலாளர்கள் வருடாவருடம் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி.ஆனால் இம்முறை அதை எப்படி கொண்டாடுவது என திண்டாடத்தில் தோட்டத்தொழிலாளர்கள் காணப்படுகின்றனர்.காரணம் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மலைபோல உயர்ந்து நிற்கின்றது.ஆனால் வறுமானமோ குறைந்து காணப்படுகின்றது.
எனவே அரசாங்கம் இந் நேரத்திலாவது சிந்தித்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்து தோட்டத்தொழிலாலாளர்களை மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட வழிவகைகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்