மொனராகலை, வெல்லவாய, வீரசேகரகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இரவு இடம்பெற்றுள்ளது.
கண்டி நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய திருமணமான நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொலை செய்யப்பட்ட நபர் ஹல்துமுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதி ஒருவருடன் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று கொலை செய்யப்பட்ட நபருக்கும் யுவதிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறின் போது இந்த யுவதி கொலை செய்யப்பட்ட நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
காயமடைந்தவர் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சந்தேக நபரான யுவதி வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (27) ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.