அகதிகளாக 12 கோடி பேர் வெளியேற்றம் – ஐ.நா. தகவல்!

0
6

ஐ.நா. அகதிகள் ஆணையகம், உலகளாவிய அகதிகள் நிலவர அறிக்கையை வெளியிட்டுள்ளது.

போர், வன்முறை, சித்ரவதை காரணமாக உலகம் முழுவதும் வீடுகளை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றவர்கள் மற்றும் உள்நாட்டுக்குள்ளேயே இடம் பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை, கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி 12 கோடியே 21 இலட்சமாக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக, உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடான் நாட்டில் 1 கோடியே 40 இலட்சம் பேர் அகதிகள் ஆகி உள்ளனர். அடுத்தபடியாக, சிரியா நாட்டில் 1 கோடியே 35 இலட்சம் பேரும், ஆப்கானிஸ்தான் நாட்டில் 1 கோடி பேரும், உக்ரைன் நாட்டில் 88 இலட்சம் பேரும் அகதிகளாக மாறியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here