அடுத்த வாரம் முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்க தீர்மானம் ..!

0
178

அரசாங்கத்திற்கு எதிராக அடுத்த வாரம் முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கபடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பிர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

ஜனாதிபதியும், பிரதமரும் தற்போதைய நிலையில் தோல்வியடைந்துள்ளதாகவும், இதனால் இந்த அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதே தற்போது உள்ள ஒரே தீர்வு எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவது, அவர்களின் தொழிற்துறைக்கு ஏற்படுத்தப்படும் இழுக்காகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலைமை தொடரும் நிலையில், நாட்டில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத நிலைமையே ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மக்கள் கோபமடையும் நிலை ஏற்படுமாயின், மே 9 தை விட பாரிய சிக்கல் நிலைமை நாட்டில் ஏற்படுமென நாடாளுமன்ற உறுப்பிர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here