அடையாள வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார பணியாளர்கள்!

0
100

சுகாதார பணியாளர்கள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார பணியாளர்கள் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதை தடுக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுற்றறிக்கையை இரத்துச் செய்யாமைக்கு எதிராக எதிர்வரும் 3ஆம் திகதி இந்த அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கைக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் இதுவரை பதிலளிக்கவில்லை என சுகாதார நிபுணர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

சுகாதார செயலாளரால் மேற்கொள்ளப்படும் முறைகேடு தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என இதன் பொது தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், 100,000 “கான்டாக்ட் லென்ஸ்கள்” கொள்வனவு செய்வதற்கான முறைகேடு தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கம் இதன் போது கோரிக்கைவிடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here