அதிகரிக்கும் உயிரிழப்பு-சோகமயமான இந்தியா

0
3

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 274 ஆக அதிகரித்துள்ளது.

விமானத்தில் பயணித்த 241 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், குறித்த விமானம் மோதிய மருத்துவ கல்லூரி மாணவர்கள் 10 பேர் உட்பட 33 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் உயிரிழந்த பலரது உடல் அடையாளம் காணமுடியாத நிலையில் உள்ளதால், உடல்களை அடையாளம் காண்பதற்கு மரபணு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பரிசோதனை முடிவடைந்த 6 பேரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழனன்று இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் பயணத்தை ஆரம்பித்த சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகி இருந்தது.

இந்த விமானத்தில் இந்தியா, இங்கிலாந்து, கனடா மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளை சேர்ந்த 230 பயணிகள் மற்றும் 2 விமானிகள், 10 பணியாளர்கள் என 242 பேர் பயணித்ததோடு அதில் ஒருவர் உயிர் தப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here