அதிகரிக்கும் கொரோனா தோற்றாளர்கள் – மீண்டும் முகக்கவசம்…!

0
140

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்றையதினம் மேலும் 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதனுடன் சேர்த்து இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 72 ஆயிரத்து 143 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த காலங்களில் இலங்கையில் கொரோனா தொற்று குறைவடைந்துள்ள நிலையில், மீண்டும் தொற்றாளர்கள் இனங்காணப்படுவது ஆபத்தான விடயம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளிகளை பேணுதல் உள்ளிட்ட சுகாதார விதிமுறைகளை மக்கள் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here