அமெரிக்காவில் கார் மீது லாரி மோதி 3 பேர் உயிரிழப்பு: இந்திய டிரைவர் கைது

0
3

அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக குடியேறிய இந்​திய டிரைவர் ஒருவர் போதை​யில் லாரியை ஓட்​டி, கார் மீது மோதி​னார். இதில் 3 பேர் உயி​ரிழந்​தனர். பலர் காயம் அடைந்​தனர்.

இந்​தி​யா​வைச் சேர்ந்​தவர் ஜஷன் ப்ரீத் சிங் (21). இவர் கடந்த 2022-ம் ஆண்டு அமெரிக்​கா​வின் தெற்கு எல்லை வழி​யாக சட்​ட​விரோத​மாக ஊடுரு​வி​னார். இவரை கலி​போர்​னியா எல்​லை​யில் ரோந்து போலீ​ஸார் கைது செய்​தனர்.

அப்​போதைய அதிபர் பைடன் நிர்​வாகம் சட்ட விரோத குடியேறிகளை விடு​வித்​து, அவர்​கள் மீதான வழக்​கு​களை நிலு​வை​யில் வைத்​தது. இதனால் ஜஷன் ப்ரீத் சிங் அமெரிக்​கா​வில் லாரி டிரைவர் ஆனார். இவர் தெற்கு கலி​போர்​னி​யா​வில் உள்ள சான் பெர்​னார்​டினோ நெடுஞ்​சாலை​யில் சரக்கு லாரியை ஓட்​டிச் சென்​றார். அப்போது கார் மீது ஜஷன் ப்ரீத் சிங் ஓட்​டிச் சென்ற லாரி மோதி​யது. இதில் 3 பேர் இறந்​தனர்.

போலீ​ஸார் ஜஷன் ப்ரீத் சிங்கை கைது செய்து மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அவர் போதைப் பொருள் பயன்​படுத்​தி​யது உறுதி செய்​யப்​பட்​டது.

சட்டவிரோதமாக குடியேறியவர்: மேலும் அவர் விபத்து நடந்த போது பிரேக் போட​வில்லை என்​பதும் அவரது லாரி​யில் பொருத்​தப்​பட்​டிருந்த கேம​ரா​வில் பதி​வான வீடியோ மூலம் உறுதி செய்​யப்​பட்​டது. ஜஷன் ப்ரீத் சிங்​கிடம் சட்​டப்பூர்வ குடி​யுரிமை இல்​லாத​தால், அவர் மீது குடி​யுரிமை மற்​றும் சுங்க அதி​காரி​களும் நடவடிக்​கை எடுக்​க​வுள்​ளனர்​.

HinduTmail

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here