அமெரிக்கா மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் – பிரேஸில்!

0
3

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிக வரிகளை விதித்ததற்கு, பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இன்சியோ லுலா டா சில்வா, தனது நாடும் அதே பலத்துடன் பதிலடி கொடுக்கும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

குறிப்பாக பிரேசிலுக்கு 50% வரி விதித்து ட்ரம்ப் அதிரடி காட்டியுள்ளார். இது, வர்த்தக போர் அபாயத்தை அதிகரித்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பு ஒகஸ்ட் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக பிரேஸில் ஜனாதிபதி , லூயிஸ் இன்சியோலுலா டா சில்வா கூறியதாவது:

முதலில் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்போம், ஆனால் பேச்சுவார்த்தை இல்லை என்றால், பரஸ்பர சட்டம் நடைமுறைக்கு வரும். அவர்கள் எங்களிடம் 50 சதவீத வரி வசூலிக்கப் போகிறார்கள் என்றால், நாங்கள் அவர்களிடம் 50% வரி வசூலிப்போம்.

இந்த பிரச்னையைத் தீர்க்க பிரேஸில் உலக வர்த்தக அமைப்பை (WTO) நாடக்கூடும்.நாங்கள் சர்வதேச விசாரணைகளைக் கேட்கலாம். மேலும் இது குறித்து விளக்கங்களைக் கோரலாம். பிரேஸில் பதிலளிக்கத் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here