அம்பாறையில் மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு!

0
5

அம்பாறையில் தமன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரனிகம பகுதியில் உள்ள வயல் ஒன்றில் மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (21) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெரனிகம பகுதிக்கு தினமும் இரவு வேளைகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வருவதாகவும் பயிர்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்துவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here