அரசாங்கம் மக்களை நன்றாக ஏமாற்றுகிறது என்கிறார் ஹர்ஷ டி சில்வா

0
12

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது திறக்கப்பட்ட தம்புள்ளை விவசாய சேமிப்பு வளாகம், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது, ஆனால் இன்னும் செயல்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று (15) ஆய்வு ஒன்றில் பங்கேற்ற அவர், இந்த வளாகம் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறி தற்போதைய அரசாங்கம் பொதுமக்களை ஏமாற்றியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்த 5,000 மெட்ரிக் தொன் கொள்ளளவுடன் கட்டப்பட்ட தம்புள்ளை விவசாய சேமிப்பு வளாகத்தின் கட்டுமானம், 2019 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின்போது, அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவால் ஆரம்பிக்கப்பட்டது.

இருப்பினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின்போது, இந்த வளாகம் இணையவழி மூலம் திறக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று அந்தக் கிடங்கிற்குச் சென்று அதன் தற்போதைய செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, கிடங்கு வளாகத்தின் நிலை குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் நேரடி வீடியோவை வெளியிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here