அஸ்வெசும சிக்கல்களை நிவர்த்திக்குக!

0
3

இந்நாட்டிலுள்ள வறிய குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் நோக்கில் முன்னைய அரசாங்கத்தால் அஸ்வெசும வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் பயனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஓர் முயற்சியாக இருந்தபோதிலும், வேலைத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக உண்மையிலேயே சலுகைகளைப் பெறத் தகுதியானவர்கள் சலுகைகளைப் பெறவில்லை என்று அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

எனவே, இந்த குறைபாடுகளை முடியுமான அளவில் தவிர்த்துக் கொள்வதற்கு, சலுகைகள் வழங்கும் வழிமுறை, அவர்களின் தகுதிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒழுங்குமுறைகளை தொடர்ச்சியாக மதிப்பிடும் திட்டமொன்றை முன்னெடுப்பது மிக முக்கியமான விடயமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இது குறித்து உரையாற்றினார். அவர் மேலும் கூறுகையில், எனவே, பின்வரும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்திடமிருந்து தெளிவான பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.

பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்று ஒரு கிலோ கரட்டின் விலை ரூ.800க்கும் அதிகமாக காணப்படுகின்றன. போஞ்சி ஒரு கிலோ ரூ.650 ஆகும். ஒரு கிலோ மிளகாய் ரூ.800 ஆகும். ஒரு கிலோ பாகற்காய் 450 ரூபா என்றவாறு விலை ஏறியுள்ளன. உணவு மற்றும் பானங்களின் விலைகள் கூட அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் பயனாளி மக்கள் தானிய உற்பத்திகளில் கூட ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களினது தானிய உற்பத்திகளுக்கு சரியான விலை கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here