இந்தியாவின் அஹமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் குறைந்தது 279 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் பின்னர், மொத்தம் 279 சடலங்கள் அல்லது உடல் பாகங்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
கடந்த வியாழக்கிழமை, பிற்பகல் 1:39 மணிக்கு லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஏர் இந்திய 171 விமானம் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் விபத்துக்குள்ளானது.
குறித்த விமான விபத்தில் பயணத்திவர்கள் மற்றும் விமானம் மோதிய மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்தவர்கள் ஆகியோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது வரையில் 19 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.