கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அஹுங்கல்ல பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதியொன்றுக்கு அருகில் இன்று துப்பாக்கிப் பிரயோக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது காரில் பயணித்தவர்களினால் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெள்ளை நிற காரொன்றில் பயணித்தவர்களே துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், சந்தேகநபர்கள் குறித்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.