அ.தி.மு.கவின் கூடலூர் தொகுதி எம்.எல்.ஏ பொன் ஜெயசீலன், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணனை சென்னையில் இன்று (19.12.2021) மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவதற்கான கருத்துகளை பகிர்ந்துக்கொண்டதோடு, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
இந்த சந்திப்பில் இலங்கை இந்திய ஊடக ஒருங்கிணைப்பாளர் மணவை அசோகன் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.
க.கிஷாந்தன்