ஆடிவேல் திருவிழாவில் கலந்து கொண்ட பிரதமர்

0
5

கொழும்பு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி கோயிலின் வருடாந்த ஆடிவேல் திருவிழாவையொட்டி நேற்று (07) அலரி மாளிகைக்கு முன்பாக வீதி உலா சென்ற தேர்ப் பவனியில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கலந்துகொண்டார்.

இதன்போது பிரதமர் கோயில் தேருக்கு அர்ச்சனைத் தட்டு வழங்கி வழிபாடுகளில் ஈடுபட்டார்.பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் ஆசீர்வாதம் வேண்டி, விசேட பூஜை நடத்தப்பட்டது.

இவ்வழிபாடுகளில் பிரதமருடன் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரியும் பிரதமரின் அலுவலக ஊழியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here