ஆணின் சடலம் மீட்பு

0
31

நுவரெலியா, நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட   உடரதல்ல தோட்ட குடியிருப்பு பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 60 வயது மதிக்கத்தக்க எஸ். வடிவேல்  என தெரியவந்துள்ளது.

இறந்த நிலையில் சடலம் இருப்பதைக் கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டது.

மேலும் சடலம்  பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here