ஆபரேஷன் சிந்​தூர் மீண்டும் தொடங்​கும்!

0
2

எதிர்​காலத்​தில் ஏதேனும் தீவிர​வாத தாக்​குதல்​ நடந்​தால் ஆபரேஷன் சிந்​தூர் மீண்டும் தொடங்​கும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்​நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹைத​ரா​பாத்தில் நேற்று நடை பெற்ற விடு​தலை தின சிறப்பு நிகழ்ச்​சி​யில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இந்​தி​யா​வுக்​கும் பாகிஸ்​தானுக்​கும் இடையி​லான போர் நிறுத்​தம் யாரோ ஒரு​வரின் தலை​யீட்​டால் ஏற்​பட்​டதா என்று சிலர் கேட்​கிறார்​கள். நான் அதை தெளிவுபடுத்த விரும்​பு​கிறேன்.

தீவிர​வா​தி​களுக்கு எதி​ரான நடவடிக்கை யாரோ ஒரு​வரின் தலை​யீட்​டால் நிறுத்​தப்​பட​வில்​லை. இன்​றைய இந்​தி​யா​விடம் எதிரி​களின் கண்​களைப் பார்த்து பதிலளிக்​கும் திறன் உள்​ளது.

இந்​தியா பாகிஸ்​தான் இடையே​யான மோதலை நிறுத்​தி​ய​தில் 3-ம் தரப்புக்கு பங்கு இல்லை என்​பதை இந்​தியா ஏற்​கெனவே திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளது. அதைத்​தான் தற்​போது பாகிஸ்​தானும் ஒப்​புக்​கொண்​டுள்​ளது.

எதிர்​காலத்​தில் ஏதேனும் தீவிர​வாத தாக்​குதல்​ நடந்​தால் ஆபரேஷன் சிந்​தூர் மீண்டும் தொடங்​கும்​. இதில்​ சமரசத்​துக்​கு இடமில்​லை. ” – எனவும் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here